சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

பரந்திருக்கும் வானத்தில்
குவிந்திருக்கும் கருமுகில்கள்
திறந்துவிடும் அணையதனை
பொழிந்துவிடும் அடைமழையாய்

நிறைந்திருக்கும் எண்ணங்கள்
நினைவுகளாய் இதயத்தில்
வடிந்துவிடும் கண்ணீராய்
சுமக்கமுடியா வேளைகளில

பிறக்கையிலே வருவதில்லை
இறக்கையிலே செல்வதில்லை
இடையில் மட்டுமேயிந்த
இடையற்ற சோதனைகள்

கைநிறைந்த செல்வங்கள்
கையோடு வருவதில்லை
நெஞ்சின் நினைவலைகள்
நெருப்பினிலே கருகிவிடும்

அழகழகாய்த் தத்துவங்கள்
அத்தனையும் வார்த்தைகளில்
அடுத்தவரின் வாழ்க்கைக்கு
அவசரமாய் அர்த்தங்கள்

சிலநேரம் அழுகை வரும்
சிந்தித்தால் சிரிப்பு வரும்
சித்தத்திலே தெரிவதெல்லாம்
செயலாக்கம் பெறுவதில்லை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading