அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

சக்தி சக்திதாசன்

பரந்திருக்கும் வானத்தில்
குவிந்திருக்கும் கருமுகில்கள்
திறந்துவிடும் அணையதனை
பொழிந்துவிடும் அடைமழையாய்

நிறைந்திருக்கும் எண்ணங்கள்
நினைவுகளாய் இதயத்தில்
வடிந்துவிடும் கண்ணீராய்
சுமக்கமுடியா வேளைகளில

பிறக்கையிலே வருவதில்லை
இறக்கையிலே செல்வதில்லை
இடையில் மட்டுமேயிந்த
இடையற்ற சோதனைகள்

கைநிறைந்த செல்வங்கள்
கையோடு வருவதில்லை
நெஞ்சின் நினைவலைகள்
நெருப்பினிலே கருகிவிடும்

அழகழகாய்த் தத்துவங்கள்
அத்தனையும் வார்த்தைகளில்
அடுத்தவரின் வாழ்க்கைக்கு
அவசரமாய் அர்த்தங்கள்

சிலநேரம் அழுகை வரும்
சிந்தித்தால் சிரிப்பு வரும்
சித்தத்திலே தெரிவதெல்லாம்
செயலாக்கம் பெறுவதில்லை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan