சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1893!

கார்த்திகை மலர்விலே…!

புனிதர்களின் நினைவேந்தி
உதிக்கும் திங்கள்
புலரும் காந்தள் மலர்
கைசேரும் எங்கும்
கருமுகில் முகம் தேடி
அலையும் தினம் தினம்
முளைக்கும் விடிவெள்ளி
சொல்லும் மாவீரர் நாமம்…!

நாடு மீட்கும் போரில்
தந்தார் உயிர் விதை
தேடும் உறவுகள் இன்னும்
தேம்பலில் உள வதை
எண்ண முடியாத தியாகம்
இவர் செய்தார்
எங்கள் விடியலுக்காய் கூவிய
வீரக் குயில்கள் இவர்…!
சிவதர்சனி இராகவன்
1/11/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading