சக்தி சக்திதாசன்

தீபஒளியொன்று நெஞ்சில்
தீந்தமிழாய் ஒளிருது
தீயதெம் எண்ணங்களை
தீயுக்கு இரையாக்குது

ஊரெல்லாம் வெடிச்சத்தம்
உள்ளங்கள் குதூகலிக்கும்
உலகத்தின் ஓரோரத்தில்
உரசுகின்ற அழிவுகள்

நானென்றும் எனதென்றும்
நாம்கொள்ளும் எண்ணங்களை
நெஞ்சிலேயே எரித்திடட்டும்
நிறையுமிந்த தீபஒளி

அசுரனை அழிக்கவில்லை
ஆண்டவன் இத்திருநாளில்
அரக்க எண்ணங்களையே
அழித்திட ஆணையிட்டார்

புதுத்துணி அணிவதெல்லாம்
பொழிவினைக் காட்டஇல்லை
பழையவையாம் தீயவைகள்
பறந்தததைக் காட்டிடவே

திருநாட்கள் அத்தனையும்
தேவைதான் வாழ்க்கையிலே
தருமவையின் அர்த்தங்களைத்
தவறின்றிப் புரிந்திட்டால்

அன்பினிய உறவுகளே
அனைவருக்கும் வாழ்த்துகள்
அகிலமெங்கும் ஒளிரட்டும்
அன்பெனும் தீபஒளியே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading