சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

தீபஒளியொன்று நெஞ்சில்
தீந்தமிழாய் ஒளிருது
தீயதெம் எண்ணங்களை
தீயுக்கு இரையாக்குது

ஊரெல்லாம் வெடிச்சத்தம்
உள்ளங்கள் குதூகலிக்கும்
உலகத்தின் ஓரோரத்தில்
உரசுகின்ற அழிவுகள்

நானென்றும் எனதென்றும்
நாம்கொள்ளும் எண்ணங்களை
நெஞ்சிலேயே எரித்திடட்டும்
நிறையுமிந்த தீபஒளி

அசுரனை அழிக்கவில்லை
ஆண்டவன் இத்திருநாளில்
அரக்க எண்ணங்களையே
அழித்திட ஆணையிட்டார்

புதுத்துணி அணிவதெல்லாம்
பொழிவினைக் காட்டஇல்லை
பழையவையாம் தீயவைகள்
பறந்தததைக் காட்டிடவே

திருநாட்கள் அத்தனையும்
தேவைதான் வாழ்க்கையிலே
தருமவையின் அர்த்தங்களைத்
தவறின்றிப் புரிந்திட்டால்

அன்பினிய உறவுகளே
அனைவருக்கும் வாழ்த்துகள்
அகிலமெங்கும் ஒளிரட்டும்
அன்பெனும் தீபஒளியே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading