மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஜெயாஉதயா

ஒளியின்றி ஒளிர்வெதற்கு
*******************************

அறிவொளி ஆற்றலொளி
அறிவியலொளி விடியல்ஒளி/
மடமை ஒழித்து
மனிதம் போற்றுமொழி/

அன்பின்ஒளி அறியாமை
அகற்றும் ஆன்மீகவொளி/
ஒளியின்றி ஒளிர்வெதற்கு
ஓய்வின்றி உழைப்பெதற்கு/

எண்ணற்ற தியாகிகளின்
இன்னுயிர்கள் குடித்து/
மண்ணிற்கு சுதந்திரம்
கிடைத்தும் பலனென்ன?

அமைதியொளி ஆனந்தவொளி
அகங்களில் இல்லையே…!
வறுமையும் பிரிவினையும்
வரிந்துகட்டிக் கொல்லுகிறது…!

பொறுமை இழந்திங்கே
போராட்டம் நிகழ்கிறது!
சாதிகளும் மதங்களும்
சதிவேலைகள் புரிகிறது

ஆதிமன வாழ்க்கையினை
அடியோடு அழிக்கிறது!
பசியும் பட்டினியும்
உயிர்களைக் குடிக்கிறது…!

பணம்மட்டும் பந்தியிலே
பல்லிளித்துச் சிரிக்கிறது!
ஒற்றுமை வேரறுந்து
உலகையே உலக்குகிறது

வேற்றுமை என்றவொன்று
வேர்ப்பிடித்து வளர்கிறது!
குருதி வெறிகொண்ட
குள்ளநரிக் கூட்டங்கள்

பெருகி வந்திங்கு
பொல்லாங்கைச் செய்கிறது!
கொலையும் கொள்ளையும்
கொடிகட்டிப் பறக்கிறது/

மனிதம் மறந்திங்கே
மடமையில் ஆழ்கிறது
புனிதமென்ற சொல்லின்
பொருளையே மறக்கிறது!

இன்னலின்றி எல்லோரும்
இத்தரையில் வாழாமல்
விடுதலை பெற்றுமென்ன
ஒளியின்றி ஒளிர்வெதற்கு?

ஜெயா உதயா

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading