கெங்கா ஸ்ரான்லி

ஒளியின்றி ஒளர்வெங்கு
————-
ஒளிதான் மனித வாழ்வின் இயங்கு முறை
ஒளியினால் தான் பகல் இரவு பேதமே
தீப ஒளிஏற்றி தெய்வத்தை வணங்கலாம்
தீபத்தினால் சில பொருட்களையும் எரிக்கலாம்
கண்ணில் தெரியும் காந்த ஒளி
கடவுளின் அம்சமெனும் அருள் ஒளி
கண்டவர் வாழ்வில் ஞான ஒளி
காத்திடுமே அவர் போகும் வழி
கார்த்திகை மாத தீபொளி
கார்த்திகேயன் மலர்ந்த ஒளி
கார்த்திகைப் பூக்கள் மலர்ந்தது
மாவீர்ர் நாளின் மனம் கனத்து
ஏற்றிடும் ஒளி
ஒளியின்றி உயிர்கள் வாழ முடியாது
ஒளி இல்லாமல் எதுவுமே இல்லை
ஒளியில்லா வாழ்வில் விடியலுமில்லை
ஒளியின்றி ஒளிர்வெங்கு காட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading