16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ரஜனி அன்ரன்
“ஒளியின்றி ஒளிர்வெங்கே ? கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.11.2023
இருளகற்றி ஒளிர்வைக் கொடுக்க
உலகை ஒளிரச் செய்வான் சூரியன்
இரவிற்கு ஒளி கொடுப்பான் சந்திரன்
கண்சிமிட்டி ஒளி கொடுக்குமே தாரகைகள்
இத்தனையும் இல்லையென்றால்
இருட்டே நிரந்தரம்
ஒளியின்றி ஒளிர்வுதான் எங்கே?
உலகு இயங்கவும் உயிரின வளர்ச்சிக்கும்
உன்னத மானிட இனத்திற்கும்
தாவர வர்க்கத்திற்கும் ஜீவராசிகளுக்கும்
ஒளியின்றி வாழ்வு இல்லையே
இருளகற்றி வாழ்வினை
ஒளிர்வாக்குவது ஒளியே ஒளியே !
தன்னை உருக்கி எமக்கு
ஒளியைத் தருவது மெழுகுதிரி
ஒளி இல்லையேல் விழிகூடத் தெரியாது
வித்தகங்களும் புரியாது
மறவர்கள் ஒளியின்றி மண்ணிற்கு ஒளிர்வில்லை
கல்லறை மேனியர் கண்திறக்க ஒளித்தீபமேற்றி
ஒளிரச் செய்வோம் கார்த்திகைத் திங்களிலே !

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...