Selvi Nithianandan

மனமார வாழ்த்துகிறேன் (589)

ஒல்லாந்து தேசத்திலே
ஒற்றுமையாய் இணைதிங்கு
ஓளிர்விட பா முகமாய்
ஒலித்த நூலாய் அரங்கேறியதே

பலநாடுகளிலும் பங்கெடுத்து
பார்பதற்க்கும் வியப்பாய்
பாக்களை பிரித்தெடுத்து
பரவச ஆய்வாய் நிகழவே

என்பயணங்களும் அதன்பாடங்களும்
என்றதொகுப்பும் வெளியாக்கமாய்
எண்ணற்ற வலிகளின் படைப்பாய்
எண்திசையும் மெருகேறிச் சென்றதே

வெற்றியில் மலராய் இணைவும்
வியந்திட கவிஅட்டையின் சேர்வும்
விருட்சமாய் பாக்களின் கோர்வையும்
வாழிய உம்புகழ் பாரெங்குமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading