Selvi Nithianandan

மனமார வாழ்த்துகிறேன் (589)

ஒல்லாந்து தேசத்திலே
ஒற்றுமையாய் இணைதிங்கு
ஓளிர்விட பா முகமாய்
ஒலித்த நூலாய் அரங்கேறியதே

பலநாடுகளிலும் பங்கெடுத்து
பார்பதற்க்கும் வியப்பாய்
பாக்களை பிரித்தெடுத்து
பரவச ஆய்வாய் நிகழவே

என்பயணங்களும் அதன்பாடங்களும்
என்றதொகுப்பும் வெளியாக்கமாய்
எண்ணற்ற வலிகளின் படைப்பாய்
எண்திசையும் மெருகேறிச் சென்றதே

வெற்றியில் மலராய் இணைவும்
வியந்திட கவிஅட்டையின் சேர்வும்
விருட்சமாய் பாக்களின் கோர்வையும்
வாழிய உம்புகழ் பாரெங்குமே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading