சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

எண்ணம் கலையுதடி

ஓடக்கரையோரம். தன்னில்
ஒய்யாரமாய். போறாய் பெண்ணே
நில்லு கொஞ்சம். நானும் வாறேன்
நின்று பேசிப் போகலாமே

எட்டு முழ வேட்டி கட்டி
வெட்டரிவாள் எடுத்துக் கிட்டு
வயற்காடு. போகாமல் __ என்
வழியோரம் ஏன் வாராய்

பட்டு வண்ணச் சேலை கட்டி என்
பைங்கிளியும் போவதையும்
பார்த்து. நின்றேனடி _ உன்
பக்கத்திலே. வந்தேனடி

சும்மா நீ சொல்லாதே __ ஒரு

சோம்ப,றியாகிடாதே
பச்சை வயல் பழுத்திருச்சு _ நீயும்
பார்த்து வெட்டிக் களம்
போடுராசா

செம்பருத்திப் பூவாட்டம் __ என்
சிங்காரி நீயிருக்க _ என்
சிந்தையெல்லாம் உன்மேல
சிதறி யெண்ணம் கலையுதடி

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading