சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பிறந்த மனை

சீவியம் இங்கேதான் சுகத்தைப் பெற்றது
தாவியும் கூவியும் மகிழ்ச்சியைக் கற்றது
பூவினில் தேனதை வண்டாக உண்டது
நாவுரைத்த மொழியும் அழகைக் கண்டது

பிஞ்சுக்களாய் கொஞ்சி விளையாடிய மைதானம்
பஞ்சமில்லா உற்சாகங்களை நாட்களும் காணும்
வஞ்சகத்தை அறியாதே வளர்ந்துகொண்டேன் நானும்
நெஞ்சை விட்டகலாது நினைவுகளும் பேணும்

என் பெற்றோர்கள் வாழ்ந்திட்ட ஆலயம்
அன்பினை சுமந்து சுற்றிய குவலயம்
உண்மையை உயிராக்கி உலவிய உறவுகள்
ஒன்றாக வாழ்ந்ததால் நன்மையின் வரவுகள்

அறைகள் ஆறைக்கொண்ட அம்சமான கல்வீடு
குறைவில்லா கும்மாளத்தின் குருவிகளின் கூடு
முத்தத்தில் கனிகளோடு நிழல்தரும் மாமரம்
சித்தங்குளிர விளையாடும் குழந்தைகட்கு மாவரம்

வாழ்வின் பக்கங்கள் பளுவின்றி கழிந்தவிடம்
வாழ்வை வாவென்றே சொர்க்கத்திற்கே அழைத்துவிடும்
எனக்கென்று எனக்கென்று செய்தாலும் அதிகாரம்
தனக்கென்று உள்ளதை பகிர்ந்திடுவார் யாரும்

கூடப்பிறந்தவரே உண்மையான சொத்து என்று
கூடி வாழ்ந்தவரால் கண்டுகொண்டேன் அன்று
பிறந்த மனைபற்றி கூறியதெல்லாம் இயற்கை
சிறப்புதனை செப்புகின்றேன் சிறிதுமில்லை செயற்கை

பிடித்ததொரு வாழ்வொன்று இன்றுந்தான் உண்டு
பிடிப்பில்லா காரியத்தை சேர்த்துந்தான் கொண்டு
இயன்றவரை முயற்சிக்கின்றேன் அன்றையதை அருகமைக்க
பயனடைந்து மறுபடியும் முன்னர்போல வடிவமைக்க

ஜெயம்
19-11-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading