மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-22

21-11-2023

பிறந்த மனை

பிறந்த மனை நிறைந்த வளம்
பச்சை காய்கறியும்
பசு தரும் சுடு பாலும்
மிச்சத்திற்கு கனிவகையும்
சொல்லவொணா சோலையும்,

முப்பத்திரண்டு பரப்புக் காணியில்
அழகான சிறிய வீடும்
மிஞ்சிய பாசம் கொண்ட
நெஞ்சம் நிறைந்த உடன்பிறப்பும்.

வாஞ்சையோடு வாழ்ந்த பெற்றோரின்
தியாகத்திற்கு ஈடேதுமில்லை
அஞ்சாமல் வாழும் என் அகிலமிது
நெஞ்சிலும் நிறைந்து நிற்கிறது

எட்டி நடக்க பேரன், பேர்த்தி வீடும்
பின் வேலியில் தாய் மாமன் வீடும்
கொஞ்சம் போக பெரியம்மா வீடும்
ஊர் முழுக்க உறவாய் வாழ்ந்தோம்
மீண்டும் வாழக் கேக்கும் மனையிது.

நாடு கொண்ட யுத்தத்தில்
நாமும் தொலைத்தோம்
மொத்தத்தை.
பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்
நெஞ்சுக்குள் சில நெருடல்கள்
வலிக்கிறது

நாம் தொலைத்த அழகிய
உறவுகளைப்
போல்
இன்று கிடைத்த உறவுகளுடன்
ஒன்றாய்ச் சேர்ந்து
வாழ்ந்திடுவோம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading