சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கல்லறை வீரர்கள் கனவிதுவோ…
விழிமூடி உறங்கிடும் வீரரே
விடுதலை வித்தான தோழரே
கல்லறைக் காவியம் கருக்கொள்ளும்
காலத்தின் நாற்றாய் விதையூன்றும்

தாயக மீட்பே தாகமாய்
தன்னுயிர் ஈகையின் தியாகமாய்
மண்மீட்பில் மறவராய் உயீர்ந்தீர்
மாவீரர் கனவோடு மண்சாய்ந்தீர்

அழுகுரல் அவலங்கள் அனர்த்தங்கள்
ஆகுதியானவர் வேட்கைகள்
அளவிட முடியாத போர்வலி
அன்னை மண்மீட்பில் தினசரி

ஈகையில் உருகிய தீபங்கள்
எரிமலைக் குமுறலின் சீற்றங்கள்
வேரெனத் தாங்கிய வீரரே

கனவது ஈழமே தாகமாய்
கருத்தரித்துள்ள கல்லறை யாகமாய்
மீளவும் மீளவும் மிடுக்குறும்
மீட்டிடும் ஈழமே வலுப்பெறும்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading