16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 243 எழுத துடிக்கும் என் மனம்”
எழுத எழுத துளிர்க்குது
எழுத்து என்னை மயக்குது
எங்கெங்கோ இழுக்குது
எதையெதையோ சொல்லுது
பிறக்கும்போது அறியவில்லை
பிறப்பின் நோக்கம் புரியவில்லை
எங்கிருந்தோ ஓசையொன்று
எனக்காக ஒலித்ததின்று
கைவிரலின் நாட்டியத்தில்
கவிதை நடனம் புரியுது
தமிழன்னை பாடுகிறாள்
தமிழ்மழையாய்ப் பொழிகிறாள்
செந்தமிழின் வனத்தினுள்ளே
தொலைந்துபோன மகிழ்வெனக்கு
செம்மொழியின் அழகிலின்று
செப்புகிறேன் தமிழ்க் கவிதை
இலக்கணத்தை கற்காமல்
இலக்கியத்துள் அடங்காமல்
இதயத்துள் கண்ணதாசன்
இறைக்கின்ற தமிழூற்று
நானொன்றும் அறிஞனில்லை
நிச்சயமாய்க் கவிஞனில்லை
நெஞ்சம் பாடும் தமிழோசை
நிறைக்குதெந்தன் காகிதத்தை
உள்ளத்தின் ஆழத்தின் உருவாகும்
கவிதையெல்லாம் கருக்கட்டும்
கவிதையாகப் பிரசவிக்கும்
காலமெல்லாம் நிலைத்திருக்கும்
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...