” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

கலவரம்
±+++====÷÷÷÷÷__<<

கண்ணிமைக்கும் நேரமதில் காலமதிலே
கலவரம்

கடன் கொடுத்தவன் வந்து வாசலிலே
கத்திக்கொண்டு நின்றாலும் கலவரமே

பொருட்களின் விலைகள் உச்சம் அதுவும் ஒரு கலவரம்

கடலுணவு வேண்டுமிடத்திலும் கலவரம் தான்

காலம் செய்த கோலமோ கலவரங்கள்

தெருவெல்லாம் கலவரம் திரிசங்காய் சுழருதையா

கைநீட்டிப்பணம் வேண்டிய பின்பு
கைமாற்ற முடியாமல்
கலவரமே

என்னையா நடக்கின்றது நாளும் கலவரமோ

திண்ணைப் பள்ளி படியாத திண்டாட்டம்
இதுதானோ

கரம்பு தின்னவும் கூலி கேட்க்கிறான்களே
கடமைகள் செய்யாது
கல கலப்பு செய்கின்றான்களே

வருடமது கடந்து போனாலும்

வாழ்வுகளிலே கலவரம்
போகாதோ

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan