இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

மனிதத்தின் நேயமே
<<<<<<<<>><<<<<<<<<

நேயம் கொண்ட உள்ளமதில் கள்ளமிருக்காது

நியாயம் தவறாப் பாதையிலே பயணமேவுமே

நல்லவுள்ளம் நாட்டினிலே நயந்து நிற்குமே
நாளும் துன்பம் தீரத்திடவே வழியேகுமே

பண்பு கொண்ட வழியும் பாங்கானது
பாகமில்லாத நிலையும் திறன் நேயமாகுமே

வஞ்சமில்லா வாழ்வழிக்க வரமும் வேண்டுமே

துஞ்சிநின்று துவண்டிடாத துணிவும் வேண்டுமே

கண்ணிய இலட்சியம் நிலைக்க வேண்டுமே
கனிவு கொண்ட மனிதர் சிறந்திடவே

காலம் தன்னில் மனிதமும் வாழுமே

குவலயம் மிளிர குமுதமும் வீசட்டுமே

பணிவு கொண்டு எழுந்த போது

பகையும் விலகவேண்டும் நிலையும் வேண்டுமே

வீழும் காலம் நமக்கு வேண்டாம்
விழுமியமும் காப்போம்
பாரில் என்றுமே

மனிதா மனிதத்தை நீயும தொலைத்து விடாதே

மனிதத்தின் நேயமே மனிதமும் ஆகுமே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading