” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 245 ]
“காதல்”

காதல்! காதல்! காதல் போயின் சாதல்!
உருவமற்ற உணர்வு! உயிரையும் வென்ற காதல்!
மென்மையான மேன்மையான உணர்வே காதல்!
ஆண்,பெண் இயல்பூக்கமாய் மிளிர்வது காதல்!

காதலும் காமமும் ஒன்றெனக்கூறுவாருமுளர்
இரண்டும் வேறுவேறென உரைப்பாருமுளர்
உள்ளம் உணர்வது காதல், உடல் வயப்படுவது காமமென்பர்
மலர்ந்து மணம் வீசும் உத்தமகாதல் வாழ்வில் ஒருமுறையென்பர்!

தென்றலாய் மலரும் காதல் வீறுகொண்டெழுந்தால் காமப்புயலாகவும் மாறும்
உண்மைக்காதலின் தோல்வி அழியாத காவியங்கள் ஆனது வரலாறு!
காதலும் வீரமும் போற்றியமொழிகள் என்றும் உயர்ந்து நிற்பது கண்கூடு!
காதலேயில்லாத மானிட வாழ்வு உயிரில்லாத உடல் போலாகும்!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan