” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-14.12.2023
கவி இலக்கம்-1786
சுதந்திரக்காற்று எங்கே
———————–
நீர் வளம் நில வளம் நிறைந்த
எம் தாய்த் திரு நாடே உன் நிலைதான் என்னே
வார்த்தைகளால் கூற முடியாத நிலை
எம் இலங்கைத் திரு நாட்டுக்கு
இன்று சொல்ல முடியாத செயல்களால்
பொருளாதாரப் பிரச்சினைகளும்
கொள்ளைகளும் கொலைகளுமாவே
நாட்டை விற்று கடனாளியானது
மலரும் சமுதாயம் அழிவின் நிலையில்
மின்சாரத்தடை வேலையின்மை
மருத்துவர்கள் வெளியேற்றம்
கல்வி பிரச்சினையில் தேசம்
மனித நேயம் மலர வேண்டும்
மனித உரிமைகள் காக்க படவேண்டும்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர வேண்டும்
கையேந்தும் நாட்டு நிலை மாற வேண்டும்
நாட்டிற்கு நல்ல தலைவர்கள் வேண்டும்
நேசிப்போம் எம் பிறந்த நாட்டை
சுவாசிப்போம் தமிழர்கள் சுதந்திரக் காற்றை

Nada Mohan
Author: Nada Mohan