” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 215
காலம்

காலத்தின் சுழற்சியால்
எனக்கென மாறிப்போக
கண்ணீருடன் காயங்களையும்
கேள்வியை பதிலாகவும் மாற்றும்

கடந்து வந்த பாதையின்
தவறுகளை நினைவுகளை
அனைத்தையும் உணர்த்தி நின்று
அனுபவங்களை தருவதும் காலம்

சண்டை போட்டு பேசாமல்
இருக்கும் காலம் போய்
பேசினால் சண்டை வரும் என
ஒதுங்கும் காலம் இப்போ

கடந்து வந்த பின்பே
என்னை கலங்கடித்த காலம்
கடுமையான காலம் அல்ல
வாழ்வை வடிவமைத்த காலம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan