சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1911

இயற்கையின் ஆட்டம்…!

மழையெனப் பொழிந்து
மண்ணில் நீ நிறைய
இழைத்தவரெல்லாம் மழை
வெள்ளத்தால் துயருற்றார்
வெள்ளத்தின் ஆர்ப்பரிப்பால்
வெந்து போகும் நெஞ்சங்களும்
உயர்ந்த கட்டிடத்தின் மேல்
தஞ்சம் கொள்கிறார்..!
அப்பப்போ இயற்கை போடும்
ஆட்டத்தின் பிடியில்
மானிட வாழ்வு நிலை குலைய
தண்ணீரால் கண்ணீரானதே
ஏழைகளின் வாழ்வும் ஆங்கு
காத்திடுவோம் இயற்கையை
பாதுகாப்போம் மனித வாழ்வையும்!
சிவதர்சனி இராகவன்
14/12/2023

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 220 "நிலா முற்றம்" இரவின் மடியில் அமர்ந்து இருப்பாய் மேகங்களை ஆடையாக அணிபவனே பூமிக்கு குளிர்ச்சி தரும்...

    Continue reading