மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1911

இயற்கையின் ஆட்டம்…!

மழையெனப் பொழிந்து
மண்ணில் நீ நிறைய
இழைத்தவரெல்லாம் மழை
வெள்ளத்தால் துயருற்றார்
வெள்ளத்தின் ஆர்ப்பரிப்பால்
வெந்து போகும் நெஞ்சங்களும்
உயர்ந்த கட்டிடத்தின் மேல்
தஞ்சம் கொள்கிறார்..!
அப்பப்போ இயற்கை போடும்
ஆட்டத்தின் பிடியில்
மானிட வாழ்வு நிலை குலைய
தண்ணீரால் கண்ணீரானதே
ஏழைகளின் வாழ்வும் ஆங்கு
காத்திடுவோம் இயற்கையை
பாதுகாப்போம் மனித வாழ்வையும்!
சிவதர்சனி இராகவன்
14/12/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading