இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம் _131

நிலாவில் உலா

தேய்பிறையில் தேய்ந்து
வளர் நதியாய் வளர்ந்து
வானத்து தாரகையாய்
வான்பரப்பில் நிக்கும்
நிலவே !

உன் ஒளி இன்றேல் நாமேது
உன் ஒளிக்கு
இடாய் கண்டது ஏது
பாருக்கு பட்டொளி கொடுக்கும் மதியே!

இரவில் அரன்மனை கட்டி
காக்கும் காவலனுக்கு
ஒரு நாள் விடுமுறை
அமாவாசை
ஒரு நாள் ஒளிமுகமாய்
பௌணமி!

நித்தம் பௌணமி
நிலவு போல்
பாத்திருக்க ஆசை
உன்னருகில்
நானிருக்க பக்கம் வந்தால்
சுட்டெரித்து விடுவாய் பால் நிலவே!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading