16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
திருமதி செ. தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம் கமலாக்கா,பாவையண்ணா!
சந்தம் சிந்தும் சந்திப்பு- 246.
நிலவுடன் உலா
“””””””””””””””
காய் மா மா விளம்
காய் மா காய்
ஆதியிலே யன்னை அன்னத்தை ஊட்டிட
அங்கிருந்தே யென்னை ஈர்த்தவளே
சோதியினா லென்றன் சிந்தை குளிர்ந்திட
சொர்க்கமென்றே மாயம் செய்தவளே
பாதியிலே நாங்கள் பார்த்துக் களிக்கையில்
பஞ்சுமுகி லுக்குள் பாய்ந்தவளே
தோதிலையே உன்றன் தோற்றம் மறைப்பதே
தோழியென்றே வாழ்வில் வந்தவளே!
வான்வழிநீ வந்து வாவென் றழைக்கையில்
வண்ணத்த மிழமு தூறிடுமே
தேன்மொழியா லுன்றன் தேகம் பொலிந்ததோ
தென்றலும்முன் வந்து பேசியதோ
கூன்மதியே யிங்கு குற்றம் இலாததோர்
கோமகனா ரிங்கே கூறிடுவாய்
வான்வழிவந் தவுன தன்பர் அனைவரின்
வாய்மொழிகேட் டிங்கே மீட்டளிப்பாய்!
திருமதி
செ. தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
19-12-2023.

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...