இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 216
கடந்து வந்த பாதையில்

கடந்து வந்த பாதையில்
திரும்பி பார்த்தேன் என்னை
தூரமோ மிக அதிகம்
செய்ததோ மிக சொற்பமே

கல்லும் மணலும் முள்ளும்
நிறைந்த பாதையை கடந்தது
அனுபவமாக மாறியது
உண்மையை உணரவைத்தது

சுவையும் துன்பமும் இருந்தது
கடந்து வந்த வழியிலே
இருந்தும் எனது இலக்கை
அடைந்தது மகிழ்வே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading