Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-28.12.2023
கவிதை இலக்கம்-1792
பிறப்பின் புதுமைகள்
——————
பூமியில் புதுமை நடந்தது உண்மை
புள்ளினங்கள் ஆடிப் பாடியது பெருமை
விண்ணவர் மண்ணவர் சேர்தது அன்பை
பாலக இயேசு அவதரித்து மேன்மை
அன்னை மரியாள் பெற்றது உண்மை
வானதூதர்கள் கானம் பாடியது இனிமை
இடையர்கள் காத்து நின்றது நன்மை
வானிலே விடி வெள்ளி பாதை காட்டிய நேர்மை
ஞானிகள் காணிக்கை கொடுத்தது அன்பை
இறுதியில் அவர்களும் சந்தித்தது உண்மை
புதுமை கண்டு பூரித்தது அதிசய செய்கை
விடுதலையின் விடியலாய் அவதரித்தது உண்மை
சிரித்த முகத்துடன் இளைய பூ மலர்ந்து சாதனை
சரித்திரத்தின் புதுமையாய் உதித்தது சரிதை
மனிதம் மலர்ந்திட மண்ணிலே தோன்றியது நன்மை
உத்தமனாய் பிறந்த இயேசுவை ஆராதிப்போம் கடமை

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading