” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-28.12.2023
கவிதை இலக்கம்-1792
பிறப்பின் புதுமைகள்
——————
பூமியில் புதுமை நடந்தது உண்மை
புள்ளினங்கள் ஆடிப் பாடியது பெருமை
விண்ணவர் மண்ணவர் சேர்தது அன்பை
பாலக இயேசு அவதரித்து மேன்மை
அன்னை மரியாள் பெற்றது உண்மை
வானதூதர்கள் கானம் பாடியது இனிமை
இடையர்கள் காத்து நின்றது நன்மை
வானிலே விடி வெள்ளி பாதை காட்டிய நேர்மை
ஞானிகள் காணிக்கை கொடுத்தது அன்பை
இறுதியில் அவர்களும் சந்தித்தது உண்மை
புதுமை கண்டு பூரித்தது அதிசய செய்கை
விடுதலையின் விடியலாய் அவதரித்தது உண்மை
சிரித்த முகத்துடன் இளைய பூ மலர்ந்து சாதனை
சரித்திரத்தின் புதுமையாய் உதித்தது சரிதை
மனிதம் மலர்ந்திட மண்ணிலே தோன்றியது நன்மை
உத்தமனாய் பிறந்த இயேசுவை ஆராதிப்போம் கடமை

Nada Mohan
Author: Nada Mohan