Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-28.12.2023
கவிதை இலக்கம்-1792
பிறப்பின் புதுமைகள்
——————
பூமியில் புதுமை நடந்தது உண்மை
புள்ளினங்கள் ஆடிப் பாடியது பெருமை
விண்ணவர் மண்ணவர் சேர்தது அன்பை
பாலக இயேசு அவதரித்து மேன்மை
அன்னை மரியாள் பெற்றது உண்மை
வானதூதர்கள் கானம் பாடியது இனிமை
இடையர்கள் காத்து நின்றது நன்மை
வானிலே விடி வெள்ளி பாதை காட்டிய நேர்மை
ஞானிகள் காணிக்கை கொடுத்தது அன்பை
இறுதியில் அவர்களும் சந்தித்தது உண்மை
புதுமை கண்டு பூரித்தது அதிசய செய்கை
விடுதலையின் விடியலாய் அவதரித்தது உண்மை
சிரித்த முகத்துடன் இளைய பூ மலர்ந்து சாதனை
சரித்திரத்தின் புதுமையாய் உதித்தது சரிதை
மனிதம் மலர்ந்திட மண்ணிலே தோன்றியது நன்மை
உத்தமனாய் பிறந்த இயேசுவை ஆராதிப்போம் கடமை

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading