இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

தைமகளே தரனி சிறக்கவும் வருவாயே
தளராத மனமதையும் தரவே வருவாயே

பாரெங்கும் ஒளிவீசிடவும் மகளே வருவாயே

பண்பகளும் மேலோங்கித் துலங்கிடவும் வருவாயே

இன்பமுடன் மக்களுமோ இன்னல்கள் அகன்றிடவே

இதயதீபமாய் எங்குமே விளங்கிடவும் வருவாயே

பாமுகத்தில் பூமுகங்கள் சிரித்தும் நிற்கவருவாயே

பகலொலி போல் மின்னும் பைங்கிளியேவா

பல்கலையும் துலங்கி நின்று பாரதுவும் சிறக்கட்டும்

கல்வியினால் காசினியும் கண்ணியமாய் மிளிரட்டும்

கருத்தோடு மொழிசொல்ல கருணைத் தெய்வங்களே

ஆசிர்வதியுங்கள் உங்கள் அடி பேணுவோமே

வாழ்க வாழ்க வாழியவே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading