இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

வசந்தத்தில் ஓர்நாள்

காரிருள் ஓட கலகலப்பை நாட
பேரிருள் கலைந்து பகலவன் வரவும்
தேரிழுக்க மாந்தர் தினமும் நாளெண்ண
வாரிச் சுருட்டி விரைவாய்ப் பனிகலைய

வசந்தமே வந்திடு வெளிச்சத்தைத் தந்திடு
கசப்பாய் இருக்குது காரிருள் மூட்டம்
உசுப்புது உடலை உபாதைகள் பெருகி
பசுமையைத் தேடுது பகலவனை நாடுது

பாடுபட்டு பறவையினக் கூட்டம்
கூடு கட்டக் குச்சிகள் தேடுது
வசந்தத்தில் ஓர்நாள் வந்திடு விரைவா
பசங்களும் தேட பல்லினமும் தேடுது…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading