நேவிஸ் பிலிப்

கவி இல(115) 11/01/24
தை மாதம் தரை இறங்க,,,,,,,

தைப் பாவாய் வாராய்
தரணி செழிக்க வா வா
உலகின் நலன்களை
கண்கள் காண
வந்திடுவாய் தை மகளே

வானம் பொழிய
வெள்ளம் பெருக
வறுமை நிறைய
வாடிடுவோர் நிலை பார்

ஓலைக் குடிலினிலே
வேலை தொழிலுமில்லை
வாடிடும் வறியோர்பார்
வயிறு குளிர பாலை வார்

சுய நலம் கொண்டோர் மாள
அன்பு வழி அறம்சுரக்க
தன்னலம் அறுத்து
சம உடமை இன்பம் தர

மாநிலம் மகிழ வேண்டும்
மனுக்கள் மனம் குளிர வேண்டும்
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்ற பெரும் நம்பிக்கையில்
வாடிடும் பேதையர்க்கு
வரம் தாராய் அன்புருவே!!!!!
நன்றி வணக்கம்……..

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading