நேவிஸ் பிலிப்

கவி இல(115) 11/01/24
தை மாதம் தரை இறங்க,,,,,,,

தைப் பாவாய் வாராய்
தரணி செழிக்க வா வா
உலகின் நலன்களை
கண்கள் காண
வந்திடுவாய் தை மகளே

வானம் பொழிய
வெள்ளம் பெருக
வறுமை நிறைய
வாடிடுவோர் நிலை பார்

ஓலைக் குடிலினிலே
வேலை தொழிலுமில்லை
வாடிடும் வறியோர்பார்
வயிறு குளிர பாலை வார்

சுய நலம் கொண்டோர் மாள
அன்பு வழி அறம்சுரக்க
தன்னலம் அறுத்து
சம உடமை இன்பம் தர

மாநிலம் மகிழ வேண்டும்
மனுக்கள் மனம் குளிர வேண்டும்
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்ற பெரும் நம்பிக்கையில்
வாடிடும் பேதையர்க்கு
வரம் தாராய் அன்புருவே!!!!!
நன்றி வணக்கம்……..

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading