பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(115) 11/01/24
தை மாதம் தரை இறங்க,,,,,,,

தைப் பாவாய் வாராய்
தரணி செழிக்க வா வா
உலகின் நலன்களை
கண்கள் காண
வந்திடுவாய் தை மகளே

வானம் பொழிய
வெள்ளம் பெருக
வறுமை நிறைய
வாடிடுவோர் நிலை பார்

ஓலைக் குடிலினிலே
வேலை தொழிலுமில்லை
வாடிடும் வறியோர்பார்
வயிறு குளிர பாலை வார்

சுய நலம் கொண்டோர் மாள
அன்பு வழி அறம்சுரக்க
தன்னலம் அறுத்து
சம உடமை இன்பம் தர

மாநிலம் மகிழ வேண்டும்
மனுக்கள் மனம் குளிர வேண்டும்
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்ற பெரும் நம்பிக்கையில்
வாடிடும் பேதையர்க்கு
வரம் தாராய் அன்புருவே!!!!!
நன்றி வணக்கம்……..

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading