Selvi Nithianandan

பொங்கலோ பொங்கல்

விளைந்தபயிர் கதிரிலே
விடியற்காலை முற்றத்திலே
வண்ணகோல வாசலிலே
வனப்பான பொங்கல்

மாவிலை தென்னை
தோரணங்கள் கட்டியே
புதியபானை புத்தரிசி
புதுமையான பொங்கல்

முக்கனிகள் படைத்து
முடிவுவரை இருந்து
பட்டாடை பட்டாசு
பந்தம்கூடி பொங்கல்

பொன்விளைந்த பூமியிலே
பொன்போன்ற கதிரவனும்
உணவழித்த உழவனாம்
உண்மைநன்றி சொல்லியே

தித்திப்பாய் பொங்கிடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading