வசந்தா ஜெகதீசன்

பொங்கும் உளமே தங்கும் தையே….
அறிவாய் திரண்டிடும்
அகிலம் மிரண்டிடும்
தையாய் பிறந்திடும்
தரணி விளைந்திடும்
உறவுகள் அன்பிலே
ஊக்கப் பகிர்விலே
உழவர் வனப்பிலே
உணவின் விதைப்பிலே
படரும் பரிதி போல்
பகலவன் ஒளியிலே
வானும் வசப்பட
வளமாய் பூத்த தை
வழியாய் பிறந்த தை
அகத்தின் ஆற்றலில்
ஆண்டின் தலைப்பிலே
எதிலும் ஏற்றமாய்
ஏறுமுகமெனப் பூத்த தையே
புதுமை விதைப்பிடும்
புன்னகை வசப்படும்
பொங்கு தையென
தங்கு தரணியில்
அரணாய் மலர்ந்திடு
ஆணிவேராய் படர்ந்திடு!
நன்றி. மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading