” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பொங்கும் உளமே தங்கும் தையே….
அறிவாய் திரண்டிடும்
அகிலம் மிரண்டிடும்
தையாய் பிறந்திடும்
தரணி விளைந்திடும்
உறவுகள் அன்பிலே
ஊக்கப் பகிர்விலே
உழவர் வனப்பிலே
உணவின் விதைப்பிலே
படரும் பரிதி போல்
பகலவன் ஒளியிலே
வானும் வசப்பட
வளமாய் பூத்த தை
வழியாய் பிறந்த தை
அகத்தின் ஆற்றலில்
ஆண்டின் தலைப்பிலே
எதிலும் ஏற்றமாய்
ஏறுமுகமெனப் பூத்த தையே
புதுமை விதைப்பிடும்
புன்னகை வசப்படும்
பொங்கு தையென
தங்கு தரணியில்
அரணாய் மலர்ந்திடு
ஆணிவேராய் படர்ந்திடு!
நன்றி. மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan