நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பொங்கும் உளமே தங்கும் தையே….
அறிவாய் திரண்டிடும்
அகிலம் மிரண்டிடும்
தையாய் பிறந்திடும்
தரணி விளைந்திடும்
உறவுகள் அன்பிலே
ஊக்கப் பகிர்விலே
உழவர் வனப்பிலே
உணவின் விதைப்பிலே
படரும் பரிதி போல்
பகலவன் ஒளியிலே
வானும் வசப்பட
வளமாய் பூத்த தை
வழியாய் பிறந்த தை
அகத்தின் ஆற்றலில்
ஆண்டின் தலைப்பிலே
எதிலும் ஏற்றமாய்
ஏறுமுகமெனப் பூத்த தையே
புதுமை விதைப்பிடும்
புன்னகை வசப்படும்
பொங்கு தையென
தங்கு தரணியில்
அரணாய் மலர்ந்திடு
ஆணிவேராய் படர்ந்திடு!
நன்றி. மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan