Kavikco Parama Visvalingam

தரமாய் நிமிர்வாய் நாளை…..

தரையினில் வீழ்ந்த விதைகள் எல்லாம்
தாவரமாகும் தரணயிலே
வரமாய் கிடைத்த வாழ்க்கையிது
தரமாய் நிமிர்வாய் தலைமகனே!

உரமா இருக்கும் உறவுகளில் – சிலர்
சிரமே தாழ்த்தி சிண்டு இணைப்பார் – இரு
கரமே உனது எனச் சொல்வார்
கவனம் அவர்மேல் கண்ணாயிரு.

வெறுவாய் மென்னு விளம்பரம் செய்து
வீணாய்ப் போகாதே
உரமாய் நிற்பாய் உறுதுணையாக – நாளை
உயர்வாய் நிற்பாய் குன்றாக!

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading