நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Kavikco Parama Visvalingam

தரமாய் நிமிர்வாய் நாளை…..

தரையினில் வீழ்ந்த விதைகள் எல்லாம்
தாவரமாகும் தரணயிலே
வரமாய் கிடைத்த வாழ்க்கையிது
தரமாய் நிமிர்வாய் தலைமகனே!

உரமா இருக்கும் உறவுகளில் – சிலர்
சிரமே தாழ்த்தி சிண்டு இணைப்பார் – இரு
கரமே உனது எனச் சொல்வார்
கவனம் அவர்மேல் கண்ணாயிரு.

வெறுவாய் மென்னு விளம்பரம் செய்து
வீணாய்ப் போகாதே
உரமாய் நிற்பாய் உறுதுணையாக – நாளை
உயர்வாய் நிற்பாய் குன்றாக!

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan