ஜெயம் தங்கராஜா

கவி 709

கைக்குள் கையாய் கைதொலைபேசி

அடிமையாக்கி தனக்குக் கீழே வைத்தாலென்ன
படிப்படியாக தூக்கத்தை தினமும் தொலைத்தாலென்ன
நேரத்தை தின்றுமுழுங்கி ஏப்பம் விட்டாலென்ன
பாரதூரமான கருவியிதென யாரும் திட்டினாலென்ன

காலையில் எழுந்தவுடன் கைக்குள்ளே அடங்குமிது
மாலை கடந்தாலும் நட்போ முடங்காதது
உறவுகளும் தாராத அப்படியொரு சந்தோசம்
திறந்துவிட பக்கங்களை வாழ்நாள் சுகம்பேசும்

கையாள தெரிந்தவர்க்கு வாழ்க்கையிலே வரம்
கையளவாய் இருந்துகொண்டு உலகளவைத் தரும்
நோக்கியா முதற்கொண்டு சம்சுங்வரை நன்மையதே
போக்கிய நாட்களுக்குள் பெற்றதென்றால் உண்மையதே

சாபமென்று சொல்பவர்கள் பாவிக்கத் தெரியாதவர்கள்
பாவமவர்கள் நாகரீக உலகத்தை புரியாதவர்கள்
அளவோடு அறிவியலை பயன்படுத்துவார் அறிவுடையார்
பலனற்ற தேடல்களை தேடுபவர் அறிவடையார்

ஜெயம்
01-02-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading