ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.02.24
ஆக்கம் -133
காதலர்

காலமெல்லாம் கடதாசியில்
காத்திருந்தது கண்ணிமைப்
பொழுது கைத் தொலைபேசி
பதிலில் உள்ளம் உவகையிடும்

இரவு பகல் போவது தெரியாமல்
இனம் புரியாத உணர்வில் மனம்
பூத்துக் குலுங்கி புத்தொளிர்வில்
காற்றில் பறப்பது போல் மிதந்திடும்

எல்லோருடனும் உரையாட வரும்
என்னவோ எல்லாம் சொல்லி உளறிட
மாலை எனை வாட்டுது மண நாளை
மனந் தேடுதெனக் காதலர் பாடிடுவார் .

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading