நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.02.24
ஆக்கம் -133
காதலர்

காலமெல்லாம் கடதாசியில்
காத்திருந்தது கண்ணிமைப்
பொழுது கைத் தொலைபேசி
பதிலில் உள்ளம் உவகையிடும்

இரவு பகல் போவது தெரியாமல்
இனம் புரியாத உணர்வில் மனம்
பூத்துக் குலுங்கி புத்தொளிர்வில்
காற்றில் பறப்பது போல் மிதந்திடும்

எல்லோருடனும் உரையாட வரும்
என்னவோ எல்லாம் சொல்லி உளறிட
மாலை எனை வாட்டுது மண நாளை
மனந் தேடுதெனக் காதலர் பாடிடுவார் .

Nada Mohan
Author: Nada Mohan