பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க. குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 251

காதலர்

காத்திரு கண்மணியே
காத்திரு
காலம் எல்லாம்
எனக்கா காத்திரு

கடமைக்கும்
கடல் அலைக்கும்
ஓய்வில்லை !
கடந்து செல்வோம்
ஒரு முகமாகவே
அது வரை
காத்திரு!

அருந்ததியா
காத்திரு
அகலிகையாக
காத்திரு

இராமராக நான்
இருக்கும் வரை
நீயும் சீதையாக
செறிந்த பட்டணத்தில்
காத்திரு!…

வேளை வரும்
என காத்திரு
விடியும் நமக்கும்
எனக் காத்திரு ,,,,,,!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading