பாலதேவகஜன்

பிள்ளை கனியமுதே

பெரு வரமாய் நீ! பிறக்க
மெருகியதே என் வாழ்வு
கருகியெனி போகமாட்டேன்
உனதன்பில் உருகினின்று
உயிர் வாழ்வேன்.

கனவுக்குள் நான் வாழ்ந்த
காலங்களை கரைத்தவளே!
உன் கனவே நானென என்
கரங்களில் தவழ்பவளே!
என் காயமும் தியாகமும்
உனக்காகவே தானம்மா!

Nada Mohan
Author: Nada Mohan