இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

பங்கு நீ
&&&&&&&&

என்னிலே சரிபாகம் ஆனவள் நீயே
எந்தன் காதலியே என்னுயிரும் நீயே
உந்தன் பேச்சினிலே உறைந்துவிட்டேன் நாணும்

உனக்கும் நாணோ பங்காகி நின்றேனே

அன்பிற்கு வெகுமதி உண்டோ சொல்கண்ணே

அணிக்கு தலைவியும் நீதானே என் தாரமடி
கனியும் மனதினிலே
காதல் பயிருமடி
தளைத்து நின்றுமோ கீதமிசைக்குமடி

வளைத்துப் போடுகிறாய் வாளைக் குமரியடி

மலைத்துப் போனேனடி மனைவியே உன்னழகிலே

நானொரு பாதியடி நீயொரு பாதியடி
என்பங்கும் நீயே பக்கத்தில் வாவேனடி

கவிஞர்
சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading