நேவிஸ் பிலிப்

கவி இல(122) 15/02/24
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்

வானமெனும் வீதியிலே
மேகத் திரள் ஊடறுத்து
தென்றலிலே தவழ்ந்துவந்தாய்
செந்தமிழால் படையலிட்டு
எம் செவிக்குவிருந்தாகி
மனத்துக்கு மருந்தானாய்

என்வீட்டு யன்னல் வழி
மென்னசைவாய் நீ புகுந்து
ஆன்மாவின் வெளிச்சமாய்
அறிவுக்கு தெளிவாய்
பொருள் நிறைந்த பேச்சு
மழலைகளின் வீச்சு

காற்றின்அசைவினிலே
தினம்மொரு சேதியுடன்
பேதமின்றி பேச்சுக்களும்
கருத்துப் பரிமாற்றங்களும்
கலந்துரையாடல்களும்

அக சுதந்திரம் கொண்டோம்
ஓரினமாய் இணைந்தோம்
காற்றின் வழி மொழியாக
வாழ்வு தந்த உன்னை
மறப்போமோ நாமும் நீ
எந் நாளும் வாழ்க. ,,,,,,,,,,,,
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading