நேவிஸ் பிலிப்

கவி இல(122) 15/02/24
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்

வானமெனும் வீதியிலே
மேகத் திரள் ஊடறுத்து
தென்றலிலே தவழ்ந்துவந்தாய்
செந்தமிழால் படையலிட்டு
எம் செவிக்குவிருந்தாகி
மனத்துக்கு மருந்தானாய்

என்வீட்டு யன்னல் வழி
மென்னசைவாய் நீ புகுந்து
ஆன்மாவின் வெளிச்சமாய்
அறிவுக்கு தெளிவாய்
பொருள் நிறைந்த பேச்சு
மழலைகளின் வீச்சு

காற்றின்அசைவினிலே
தினம்மொரு சேதியுடன்
பேதமின்றி பேச்சுக்களும்
கருத்துப் பரிமாற்றங்களும்
கலந்துரையாடல்களும்

அக சுதந்திரம் கொண்டோம்
ஓரினமாய் இணைந்தோம்
காற்றின் வழி மொழியாக
வாழ்வு தந்த உன்னை
மறப்போமோ நாமும் நீ
எந் நாளும் வாழ்க. ,,,,,,,,,,,,
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan