இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச

பங்கு நீ

கொண்டாளே என்னுடன் வாழ்க்கையில் பங்கு
கண்டேனே வசந்தத்தின் வருகையை நானங்கு
ஓருயுரில் ஈருடல்கள் வாழுகின்ற அதிசயம்
யாரிவளோ அறிந்துகொண்டேன் இன்பத்தின் இரகசியம்

திருமணம் என்றாலே ஒருவருக்கொருவரின் அர்ப்பணிப்பு ஒருமனம் ஒருமனத்தின்மேல் அக்கறையின் திணிப்பு
பகிர்ந்துகொள்ள அருகினில் துணையான உறவு
அகிலமே தாராத சந்தோசமாய் வரவு

பங்கெடுத்தாள் இன்பதுன்பங்களில் உற்ற தோழியாக
எங்கிருந்தோ வந்தாலும் எனைக்காக்கும் வேலியாக
பழகிவிட பழகிவிட பாலதுவும் புளிக்கவில்லை
அழகான காலங்களை அமைக்கின்றது வாழ்வினெல்லை

சரியான பென்னைத்தான் சொர்க்கமும் நிச்சயித்தது
சரிபாதி காலத்துள் ஆனந்தத்தை உற்பவித்தது
வெறுமையை இல்லாதாக்கி இல்லத்தரசியாய் வந்தவளை
வெறுப்பேனோ ஆயுளுக்கும் பொன்னவளை என்னவளை

ஜெயம்
19-02-2024

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading