இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

பகலவன்

பயிரினை ஆக்கி உயிரினைக் காக்கும் மூலம்
ஒழியுமே இருளும் வெளிச்சத்தின் அருளும் சூழும்
மரங்கள் எங்கெங்கோ வரங்கள் அங்கங்கு கொடுப்பு
சூரியன் எழுச்சி பாரின் வளர்ச்சிக்கு எடுப்பு

தூக்கத்தால் எழுப்பி ஊக்கத்தை நுழைக்கும் செங்கதிரே
தற்காலிக ஒளியால் உற்சாகத்தை பொழிந்திடும் புதிரே
தோன்றுவது மறைவது ஆண்டாண்டாய்ப் பறைவதும் பொய்யே
சுழல்கிற தரையாலே விழுகின்ற திரையது மெய்யே

அடிவானில் வழியும் குடிகொள்ளும் எழிலின் காட்சி
முந்தியும் அழகு அந்தியும் அழகின் ஆட்சி
அண்ட வெளியில் உண்டு ஒளியை நிலவும்
கையகம் கொண்டதை வையகம் கொட்டியே உலவும்

நெருப்பான நட்ச்சத்திரம் அரும்பெரும் நட்ச்சத்திரம் என்பதும்
பேதமற்றது தருவதற்கு சேதமின்றியே உருளுது ஒன்பதும்
வெளிச்சத்தை உலகிற்கும் வெளி சத்தை உடலுக்கும்
தந்திடவே கிழக்கில் உதிக்கின்ற விளக்கே பகலவன்

ஜெயம்
04-03-2024

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading