” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

பகலவன்

பயிரினை ஆக்கி உயிரினைக் காக்கும் மூலம்
ஒழியுமே இருளும் வெளிச்சத்தின் அருளும் சூழும்
மரங்கள் எங்கெங்கோ வரங்கள் அங்கங்கு கொடுப்பு
சூரியன் எழுச்சி பாரின் வளர்ச்சிக்கு எடுப்பு

தூக்கத்தால் எழுப்பி ஊக்கத்தை நுழைக்கும் செங்கதிரே
தற்காலிக ஒளியால் உற்சாகத்தை பொழிந்திடும் புதிரே
தோன்றுவது மறைவது ஆண்டாண்டாய்ப் பறைவதும் பொய்யே
சுழல்கிற தரையாலே விழுகின்ற திரையது மெய்யே

அடிவானில் வழியும் குடிகொள்ளும் எழிலின் காட்சி
முந்தியும் அழகு அந்தியும் அழகின் ஆட்சி
அண்ட வெளியில் உண்டு ஒளியை நிலவும்
கையகம் கொண்டதை வையகம் கொட்டியே உலவும்

நெருப்பான நட்ச்சத்திரம் அரும்பெரும் நட்ச்சத்திரம் என்பதும்
பேதமற்றது தருவதற்கு சேதமின்றியே உருளுது ஒன்பதும்
வெளிச்சத்தை உலகிற்கும் வெளி சத்தை உடலுக்கும்
தந்திடவே கிழக்கில் உதிக்கின்ற விளக்கே பகலவன்

ஜெயம்
04-03-2024

Nada Mohan
Author: Nada Mohan