பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சுமித்ரா தேவி

கவிதை இலக்கம்04
மகள்
அழகின் குரலாய்
ஒலிக்கும் அழகே
அந்திவான நிலவே
ஆடி அசையும் பதுமையே
இதயம் கவரும்
இன்னிசை மழையே
கவிதை ஊற்றான
கள்ளச்சிரிப்பே
தேனாய் தித்திக்கும்
தேவாமிர்தமே
தெவிட்டா அழகின்
எட்டாக் கனியே
துள்ளி குதிக்கும்
புள்ளி மானே
துயிலும் போதும் சிரித்த முகமே
கன்ன சிவப்பில்
காண்போர் மயங்க
வழியெங்கும் உவமை தேடி
வழியின்றி தவிக்கின்றேன்
உன் அழகை கவி எழுத
சுமித்ரா தேவி
இலங்கை (கொழும்பு)

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading