” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பெண்மையைப் போற்றுவோம்!

அன்பின் உருவாய் அகிலம் வாழ
அணைத்துக் காக்கும் பிறவியிவள்!
இன்பம் ஒன்றே இலக்காய்க் கொள்வாள்
ஈடே காணா மேன்மையவள்!
தன்னை யுருக்கித் தருவாள் ஒளியை
தண்மை நிலவாய்ப் பூமியிலே!
இன்னல் ஒன்றே இவளின் பாதை
இரக்கம் இல்லா மூடரிடை!

கனவைப் புதைத்தே களிப்பை விதைக்கும்
கணமும் ஓயாக் கடிகாரம்!
அனலில் நின்றும் அமுதைப் பொழியும்
ஆற்றல் நிறைந்த புதுமையிவள்!
தனமாய்க் காண்பாள் தாங்கும் குடும்பம்
தங்கம் இவளுக் கீடில்லை!
மனத்தில் மலராய் மருவா நிறைவாய்
மனிதம் படைக்கும் தூய்மையவள்!

முடியா வலையாய் முறுவல் பறிக்கும்
மூர்க்கம் இன்னும் பூமியிலே!
படிப்பின் உயர்வும் பறித்தே யடக்கிப்
பதற வைக்கும் மனிதரிங்கே!
வடிகால் இன்றே வாடல் காணல்
வனிதை வாழ்வில் நித்தியமாய்!
இடியாய்த் தாக்கும் இடரிடையும்
இனிமை உருவாய் உலவுகின்றாள்!
எத்தனை சொல்லினும் இவளுக்கீடில்லை
வாஞ்சையாய்ப் போற்றுவோம் பெண்மையை!

கீத்தா பரமானந்தன்
18-03-24

பெண்மையைப் போற்றுவோம்!

அன்பின் உருவாய் அகிலம் வாழ
அணைத்துக் காக்கும் பிறவியிவள்!
இன்பம் ஒன்றே இலக்காய்க் கொள்வாள்
ஈடே காணா மேன்மையவள்!
தன்னை யுருக்கித் தருவாள் ஒளியை
தண்மை நிலவாய்ப் பூமியிலே!
இன்னல் ஒன்றே இவளின் பாதை
இரக்கம் இல்லா மூடரிடை!

கனவைப் புதைத்தே களிப்பை விதைக்கும்
கணமும் ஓயாக் கடிகாரம்!
அனலில் நின்றும் அமுதைப் பொழியும்
ஆற்றல் நிறைந்த புதுமையிவள்!
தனமாய்க் காண்பாள் தாங்கும் குடும்பம்
தங்கம் இவளுக் கீடில்லை!
மனத்தில் மலராய் மருவா நிறைவாய்
மனிதம் படைக்கும் தூய்மையவள்!

முடியா வலையாய் முறுவல் பறிக்கும்
மூர்க்கம் இன்னும் பூமியிலே!
படிப்பின் உயர்வும் பறித்தே யடக்கிப்
பதற வைக்கும் மனிதரிங்கே!
வடிகால் இன்றே வாடல் காணல்
வனிதை வாழ்வில் நித்தியமாய்!
இடியாய்த் தாக்கும் இடரிடையும்
இனிமை உருவாய் உலவுகின்றாள்!
எத்தனை சொல்லினும் இவளுக்கீடில்லை
வாஞ்சையாய்ப் போற்றுவோம் பெண்மையை!

கீத்தா பரமானந்தன்
18-03-24

Nada Mohan
Author: Nada Mohan