” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:259
02/04/2024 செவ்வாய்
ஊக்கம்
————
ஊக்கம் உயர்வு தரும்- ஆதலால்
ஊக்கம் உயிரென நோக்கு!
காக்கும் கடவுளும் காப்பாற்றார்-உன்
ஊக்கம் தவறின் எப்போதும்!

இன்று, நாளையென நீள-ஊக்கம்
நின்றே போய்விடும் நினை!
குன்றை, மலையாய் எண்ணா ஊக்கம்,
நன்றே நகர்ந்திடும் அறி!

ஊக்கமிலா நோக்கம்-பெரிதெனினும்,
தேக்க நிலைக்கே இட்டுச் செல்லும்!
ஆக்கம் தந்திடுமே வாழ்வில்-ஊக்கம்
நோக்கத்தையும் நிறைவு செய்யும்!

செல்லும் பாதை நீண்டிடினும்-ஊக்கம்
வெல்லும், உன்வாழ்வும் சிறக்கும்!
அல்லும் பகலும் உழைத்தாலும்-ஊக்கம்
இல்லா நோக்கம் பிசுபிசுக்கும்!

உலகில் இலக்கு உண்டேனும்- ஊக்கம்
விலகில் பிழைத்திடும் இலக்கு!
இலகில் காத்திருந்த கிளியாகி-ஊக்கம்
விலகில், விளைந்திடும் விபரீதம்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan