Selvi Nithianandan ஜந்துமாகி இன்று (அம்மா)

ஜந்துமாகி இன்று
அன்னையின் ஆண்டு ஜந்து
அகமும் ரணமாய் வெந்து
அதிகாலை கண்ணீரும் வழிந்து
அலரி அடித்து எழுந்து

எனக்குள் இருப்பதாய் நினைவு
எண்ணியே கழியுதே வாழ்வு
மறந்திட முடியாத சாவு
மாரடைப்பே மரண முடிவு

வயோதிபம் குன்றா நிலையும்
வளைந்து சுறுசுறுப்பு வேலையும்
வட்டவடிமாய் வதனத் தோற்றமும்
வாஞ்சையாய் அணைக்கும் அழகும்

எட்டு மகவுகளின் சொத்து
ஏற்றதாழ்வு கிடையா முத்து
எட்டும் தூரமும் மறையுது
மறக்கத்தான் எம்மால் முடியுமா?

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading