Selvi Nithianandan ஜந்துமாகி இன்று (அம்மா)

ஜந்துமாகி இன்று
அன்னையின் ஆண்டு ஜந்து
அகமும் ரணமாய் வெந்து
அதிகாலை கண்ணீரும் வழிந்து
அலரி அடித்து எழுந்து

எனக்குள் இருப்பதாய் நினைவு
எண்ணியே கழியுதே வாழ்வு
மறந்திட முடியாத சாவு
மாரடைப்பே மரண முடிவு

வயோதிபம் குன்றா நிலையும்
வளைந்து சுறுசுறுப்பு வேலையும்
வட்டவடிமாய் வதனத் தோற்றமும்
வாஞ்சையாய் அணைக்கும் அழகும்

எட்டு மகவுகளின் சொத்து
ஏற்றதாழ்வு கிடையா முத்து
எட்டும் தூரமும் மறையுது
மறக்கத்தான் எம்மால் முடியுமா?

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading