Selvi Nithianandan ஜந்துமாகி இன்று (அம்மா)

ஜந்துமாகி இன்று
அன்னையின் ஆண்டு ஜந்து
அகமும் ரணமாய் வெந்து
அதிகாலை கண்ணீரும் வழிந்து
அலரி அடித்து எழுந்து

எனக்குள் இருப்பதாய் நினைவு
எண்ணியே கழியுதே வாழ்வு
மறந்திட முடியாத சாவு
மாரடைப்பே மரண முடிவு

வயோதிபம் குன்றா நிலையும்
வளைந்து சுறுசுறுப்பு வேலையும்
வட்டவடிமாய் வதனத் தோற்றமும்
வாஞ்சையாய் அணைக்கும் அழகும்

எட்டு மகவுகளின் சொத்து
ஏற்றதாழ்வு கிடையா முத்து
எட்டும் தூரமும் மறையுது
மறக்கத்தான் எம்மால் முடியுமா?

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading