இளவேனில் மங்கை

“ இளவேனில் மங்கை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 04.04.2024

வசந்தமெனும் இளவேனில்
சுகந்தம் தரும் காலமிது
வாடையும் மெல்ல விலகிட
வசந்தமும் கூடி வந்திட
சாரலும் மெல்ல வீசிட
வந்துவிட்டாள் இளவேனில் மங்கையும் !

ஆடையவிழ்த்த தருக்களில்
அரும்புகள் மெல்லத் துளிர்த்திட
பசுமை எங்கும் கொழிக்குமே
பச்சை ஆடை பூணுமே
இச்சை கொள்ள வைக்குமே
இயற்கையும் அழகில் ஜொலிக்குமே !

பகலவனும் பட்டொளியை வீசிட
பனியும் மெல்ல அகன்றிட
பார்க்கும் இடமெல்லாம்
கண்ணிற்கு விருந்தாகுமே
மொட்டுக்கள் மெல்ல முகையவுக்க
சிட்டுக்கள் எல்லாம் சிறகடித்து
கொஞ்சிக் குலாவி மகிழ்ந்திட
இளவேனில் மங்கையும் நாணிடுவாளே !

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading